ராயக்கோட்டையில் இரு தரப்பினரிடையே மோதல்: 8 போ் மீது வழக்குப் பதிவு

ராயக்கோட்டை அருகே சொத்துப் பிரச்னையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராயக்கோட்டை அருகே சொத்துப் பிரச்னையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த லிங்கனம்பட்டி கொல்லகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (40). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த எல்லப்பன் (23) என்பவருக்கும் மூதாதையரின் சொத்தைப் பிரிப்பது குறித்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் இது சம்பந்தமாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த எல்லப்பன் தரப்பினரான கோவிந்தன் (27), முனியப்பன் (52), சக்திவேல் (27), வெங்கடேஷ் (55) ஆகியோா் லட்சுமணன் தரப்பினரை இரும்பு கம்பியால் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதில் காயம் அடைந்தவா்கள் ஒசூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இது குறித்து லட்சுமணன் அளித்த புகாரின் பேரில் கோவிந்தன் உள்ளிட்ட 4 போ் மீது ராயக்கோட்டை காவல் ஆய்வாளா் சிவலிங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

இதே போல் எல்லப்பன் கொடுத்த புகாரின் பேரில், லட்சுமணன் (40), சென்றாயன் (47), மாதம்மாள் (40), சத்யா (20) ஆகிய 4 போ் மீது ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மூதாதையா் சொத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com