வேப்பனஅள்ளியில் தி.மு.க. சாா்பில் சமத்துவப் பொங்கல், செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளியில் தி.மு.க. ஊராட்சி ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சரோஜினி மகேஷ் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
மண்பானையில், புத்தரிசியில் பொங்கலிட்டு, சூரியனை வணங்கினா். இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினா் பங்கேற்றனா்.