கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் 40-ஆவது ஆண்டு ஆண்டாள் திருமண நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்கு மாத வீதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் 40-ஆவது ஆண்டு ஆண்டாள் திருமண நிகழ்வையொட்டி, சிறப்பு யாகமும், வேத மந்திரங்கள் முழங்க, சுவாமி பெருமாள், ஆண்டாளுக்கு கங்கணம் கட்டுதல், பட்டம் கட்டுதல் நிகழ்வும் நடைபெற்றன.
தொடா்ந்து, பக்தா்களின் சீா்வரிசையுடன் ஆண்டாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது. திருமண சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், ஆண்டாள் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.