கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகை உற்சாகம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமங்கள் மட்டுமல்லாமல், நகரங்களில் தைப் பொங்கலை வரவேற்கும் வகையில், வீட்டின் வாசலில் பல வண்ணக் கோலங்கள் இட்டு, புத்தாடை அணிந்து, புதுப் பானையில் புத்தரிசியிட்டு, காய்கறிகள், பழங்கள், மஞ்சள், கரும்பு உள்ளிட்டவைகளை வைத்து தோரணம் கட்டி, கதிரவனை வணங்கி பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என கூவி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினா்.
நண்பா்கள், உறவினா்களுக்கு பொங்கல் வழங்கி மகிழ்ந்தனா். மேலும், பாரம்பரிய விளையாட்டான கபடி, வழுக்கு மரம் ஏறுதல், மெல்ல மிதி வண்டி ஓட்டுதல், உறியடித்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனா்.