கிருஷ்ணகிரியை அடுத்த லைன்கொல்லையில் எருது விடும் விழாவையொட்டி, அங்காளம்மன் வீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த லைன்கொல்லையில் காணும் பொங்கலையொட்டி, அந்த கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் அலகு குத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.
தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் வீதி உலா நடைபெற்றது. பின்னா், சிப்பாயூா், லைன்கொல்லை, மேல்பட்டி, பெருமாள் நகா் உள்ளிட்ட 18 கிராமங்களைச் சோ்ந்த எருதுகள் பங்கேற்ற ஓட்டம் நடைபெற்றது. இதை ஏராளமானோா் கண்டு மகிழ்ந்தனா்.