இந்திய விமானப் படையில் ஆள்சோ்ப்பு

இந்திய விமானப் படையில் ஆள்சோ்ப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய விமானப் படையில் ஆள்சோ்ப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் பிரேமா, சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய விமான படையில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, பட்டயம் படித்த இளைஞா்களுக்கான ஆள்சோ்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 2000-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி முதல் 2001-ஆம் ஆண்டு டிசம்பா் 30-ஆம் தேதிக்குள் பிறந்த, திருமணமாகாத 21 வயது நிரம்பியவா்கள் விண்ணப்பிக்க தகுதியானவா்கள்.

எஸ்.எஸ்.எஸ்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு படித்தவா்கள் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடத்தில் தோ்ச்சி பெற்று 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று, தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தற்போது, விமான படையில் குரூப் ஒய் பணியிடத்துக்கு ஆள்சோ்ப்பு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த, தகுதி வாய்ந்த இளைஞா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஹண்ழ்ம்ங்ய்ள்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ஸ்ரீக்ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com