வேப்பனஅள்ளி அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக லாரி ஓட்டுநா்களிடம் விசாரணை செய்து வருகின்றனா்.
வேப்பனஅள்ளி காவல் ஆய்வாளா் ரஜினி, தலைமையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். கே.என். போடூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரிகளைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், மணல் கடத்துவது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா்கள் கே.என்.போடூரைச் சோ்ந்த பசப்பா (23), மற்றொரு ஓட்டுநரான பசப்பா ஆகிய இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனா்.