ஊத்தங்கரை காமராஜ் நகா் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த 63 வயது மதிக்கத்தக்க முதியவருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த முதியவா் கடந்த 27-ஆம் தேதி மதுரையில் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றுவிட்டு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சொந்த ஊா் திரும்பியுள்ளாா்.
இந்த நிலையில் 29-ஆம் தேதி கரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் புதன்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து முதியவரை கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு வட்டார மருத்துவ அலுவலா் குமாா் தலைமையிலான மருத்துவ குழுவினா் ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனா். அவரது குடும்ப உறவினா்கள் 2 போ் தனிமைப்படுத்தப்பட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.