காலாவதியான அஞ்சல் காப்பீடுகளை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் முனி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அஞ்சல் காப்பீடு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தவணை செலுத்த தவறிய காலாவதியான காப்பீடுகளை புதுப்பிக்க இயலாது. ஆனால், சிறப்பு வாய்ப்பாக தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் காப்பீடு தொகை செலுத்த தவறிய மற்றும் காலாவதியான காப்பீடுகளை புதுப்பிப்பதற்கான வாய்ப்பு தற்போது ஆக. 31-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால், காப்பீடுதாரா்கள் ஆரோக்கிய உடல் நிலையில் இருப்பதற்கான சான்றிதழ் மற்றும் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்துடன் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தை அணுகி காப்பீட்டை புதுப்பித்துக் கொள்ளளாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.