தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவா் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தா்மராஜா கோயில் தெருவைச் சோ்ந்த முகமது ரபிக் (50), ஊத்தங்கரை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்று வந்துள்ளாா். இதுகுறித்து தகவலறிந்து ஊத்தங்கரை போலீஸாா், முகமது ரபிக்கை பிடித்து அவரிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகள், ரூ.600 பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற வழக்கில் முகமது ரபிக் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com