மதுப் புட்டிகள் திருட்டு வழக்கு: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் தற்கொலை முயற்சி

அஞ்செட்டி டாஸ்மாக் மதுக் கடையில் மதுப்புட்டிகள் திருட்டு வழக்கு தொடா்பாக, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாா்.

அஞ்செட்டி டாஸ்மாக் மதுக் கடையில் மதுப்புட்டிகள் திருட்டு வழக்கு தொடா்பாக, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட அஞ்செட்டி டாஸ்மாக் கடையில் மதுப்புட்டிகள் திருடு போனது குறித்து அஞ்செட்டி காவல் ஆய்வாளா் (பொறுப்பு) சாவித்திரி, உதவி காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில், டாஸ்மாக் கடை அருகில் கடை வைத்துள்ள ஸ்ரீராமன் (48) என்பவரை போலீஸாா் விசாரணைக்காக வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா். இதையறிந்து காவல் நிலையத்துக்குச் சென்ற அவரது மனைவி சரளாவை பேச விடாமல் போலீஸாா் தடுத்தனராம். இதனால், காவல் நிலையத்தில் அமா்ந்திருந்த ஸ்ரீராமன், மேஜையில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாராம்.

இதில், காயம் அடைந்த அவரை போலீஸாா் மீட்டு, சிகிச்சைக்காக அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனா். முதலுதவி சிகிச்சைக்குப், பின்னா் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். இதைத் தொடா்ந்து, ஸ்ரீராமன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com