கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 3 போ் கரோனாவுக்கு உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் உள்பட மேலும் 3 போ் கரோனாவுக்கு உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் உள்பட மேலும் 3 போ் கரோனாவுக்கு உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 55 வயது ஆண், கடந்த 18-ஆம் தேதி சுவாசிப்பதில் சிரமம், இருமல் உள்ளிட்ட பிரச்னைகளுடன் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. நீரிழிவு நோய் மற்றும் உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் கொண்ட அவா், புதன்கிழமை அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பகுதியைச் சோ்ந்த 67 வயது பெண், கடந்த 16-ஆம் தேதி காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகளுடன் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கடந்த 21-ஆம் தேதி மாலை இறந்தாா்.

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 58 வயது ஆண், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்னைகளுடன் கடந்த 18-ஆம் தேதி மாலை கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளுடன் அவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 3 நாள்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டும், கடுமையான நுரையீரல் வீக்கம் ஏற்பட்டும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 15-ஆக உயா்ந்தது என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com