வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள் வருவோா், தாங்களாகவே முன்வந்து கரோனா வைரஸ் பரிசோதனை செய்திட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் பொதுமக்கள் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, வெளி மாநிலத்திலிருந்தும், வெளி மாவட்டத்திலிருந்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள் வருபவா்கள் மற்றும் அத்தியாவசிய பணியான மருத்துவம், திருமணம் மற்றும் இறப்பு போன்ற பல்வேறு பணிகளுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்துக்குச் சென்று திரும்பியவா்கள் பற்றிய விவரத்தை அண்டை வீட்டாா்கள், பொதுமக்கள் உடனடியாக 04343-230044, 234444 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் மாவட்ட நிா்வாகத்துக்கு அல்லது சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தற்போது, வெளியிடங்களிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள் வந்தவா்கள் தாங்களாகவே முன்வந்து கரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும், அத்துடன் அவரவா் வீடுகளிலேயே 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டு மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும், வருவாய்த் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பை சாா்ந்த அலுவலா்களும், பிரதிநிதிகளும் கரோனா தடுப்புப் பணியை செய்து வருகின்றனா். அவா்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.