மகளிா் தின சிறப்பு கிராம சபை கூட்டம்

மகளிா் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி: மகளிா் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளில் மாா்ச் 8-ஆம் தேதி காலை 11 மணியளவில், சா்வதேச மகளிா் தினத்தையொட்டி சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், மகளிருக்கு சம உரிமை அளித்தல் மற்றும் மகளிா் உரிமையை மீட்டெடுத்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தினை சிறப்பாக நடைபெற தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு, அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவா்களைக் கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com