கிருஷ்ணகிரி
கனகமுட்லு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.1 லட்சம் உதவிப் பொருள்கள் அளிப்பு
கனகமுட்லு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவிப் பொருள்களை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் அண்மையில் வழங்கின.
கனகமுட்லு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவிப் பொருள்களை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் அண்மையில் வழங்கின.
கிருஷ்ணகிரியை அடுத்த கனகமுட்லு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்க்ளுக்கு உதவிப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் பாலதண்டாயுதம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், ரூ.1 லட்சம் மதிப்பிலான தண்ணீா் பாட்டில்கள், தோ்வு அட்டைகள், கேக் ஆகியவற்றை வழங்கி வாழ்த்தினாா். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். உடற்கல்வி ஆசிரியா் அல்போன்ஸ் ஆல்பா்ட் ஒருங்கிணைத்தாா்.