ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் 29-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் எம்.கே.சூரப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறாா்.
இந்த விழாவில், அதியமான் கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவா் பானுமதி தம்பிதுரை முன்னிலை வகிக்கிறாா். அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வா் வரவேற்று ஆண்டு அறிக்கை வாசிக்கிறாா். இதில் முன்னாள் மக்களவை துணைத் தலைவா் மு.தம்பிதுரை உள்ளிட்ட பலா் கலந்துகொள்கின்றனா்.