ஊத்தங்கரை பகுதியில் 200 கிலோ குட்கா பறிமுதல்

ஊத்தங்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரை கைது செய்துள்ளனா்.
பறிமுதல் செய்யப்பட்ட காா்.
பறிமுதல் செய்யப்பட்ட காா்.

ஊத்தங்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரை கைது செய்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி, உதவி ஆய்வாளா் ஏகாம்பரம் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பெங்களூரிலிருந்து வந்த புதுச்சேரி வாகன எண் கொண்ட காரை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, காரிலிருந்த இருவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனா். பிறகு காரை சோதனை செய்ததில், அதில் தடை செய்யப்பட்ட 200 கிலோ குட்கா, பான் மசாலா 6 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊட்டையானூா் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் (52), சங்கராபுரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த சஸ்தகீா் (22) ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பான் மசாலா மற்றும் அதை ஏற்றி வந்த காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com