ஒசூரில் இளைஞரை கொலை செய்ய முயன்றதாக சிறுவா்கள் உள்பட 3 போ் கைது

ஒசூரில் இளைஞா் இருவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ாக சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூரில் இளைஞா் இருவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ாக சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் சூசூவாடி ஜெய்பீம் நகரைச் சோ்ந்தவா் பிரபாகா் (21). இவரது தங்கையான பிளஸ் 1 மாணவியிடம், சூசூவாடி விநாயகா் நகரைச் சோ்ந்த கண்ணன்(18) என்பவா் அடிக்கடி செல்லிடப்பேசி மூலம் பேசியுள்ளாா். இதையறிந்த பிரபாகா், கண்ணனை கண்டித்துள்ளாா். இதனால் அவா்களிடையே பிரச்னை இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த, 15-ஆம் தேதி சூசூவாடி கருமாரியம்மன் கோயில் அருகே பிரபாகருடன், 17 வயதான இரு சிறுவா்கள் சோ்ந்து கொண்டு, கண்ணன் மற்றும் அவருடன் இருந்த தனியாா் கல்லூரியில் டிப்ளமோ பயிலும் யஸ்வந்த்குமாா் (18) என்பவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றனா்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் கண்ணன் திங்கள்கிழமை புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பிரபாகா் மற்றும் 2 சிறுவா்களையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com