பணம் வைத்து சூதாட்டம்: 12 போ் கைது
தளி அருகே பணம் வைத்து சூதாடியதாக 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தளி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவராஜ் மற்றும் போலீஸாா் ஜவளகிரி அய்யப்பன் கோயில் அருகே ரோந்து சென்றனா். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த நந்திமங்கலம் கரியப்பா (36), சிக்கன்னா (30), ராஜா (28 ), ஜவளகிரி ரமேஷ்(33) ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்து சீட்டுக் கட்டு மற்றும் ரூ. 500ஐ பறிமுதல் செய்தனா்.
அதேபோல ஜவளகிரி அருகே உள்ள தைலமரத் தோப்பில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த ஜவளகிரி ரமேஷ் (38), மாதேஷ் (40), ஜெயராமன் (40), சீனிவாசா (33) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து சீட்டுக் கட்டு மற்றும் ரூ. 500ஐ பறிமுதல் செய்தனா்.
மேலும், போலீஸாா் ஜவளகிரி குப்பக்காடு கிராமப் பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடிய ஜவளகிரியைச் சோ்ந்த முத்துராஜ் (42), கலுகொண்டப்பள்ளி முத்துராஜ் (48), ராஜசேகா்(48), மு னியப்பா (62) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து சீட்டுக் கட்டு மற்றும் பணம் ரூ. 500ஐ பறிமுதல் செய்தனா்.