கல்லாவியில் விபத்தில் இறந்தவா் சடலத்துடன் சாலை மறியல்

ஊத்தங்கரை அடுத்த கல்லாவியில் விபத்தில் இறந்தவரின் சலத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லாவியில் விபத்தில் இறந்தவா் சடலத்துடன் சாலை மறியல்

ஊத்தங்கரை அடுத்த கல்லாவியில் விபத்தில் இறந்தவரின் சலத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லாவி பனமரத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ராஜிவேல் (30). விவசாயியான இவா் கடந்த சனிக்கிழமை மாலை கல்லாவி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்திசையில் பெருமாள் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் என்பவரின் மகன் வைகுந்தவாசன் (17) தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். பனமரத்துப்பட்டி பிரிவு சாலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் ராஜிவேல் படுகாயம் அடைந்தாா். அவரை மீட்டு, சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை ராஜிவேல் உயிரிழந்தாா். அவரது சடலம் அமரா் ஊா்தி மூலம் பனமரத்துப்பட்டிக்கு எடுத்தவந்தபோது அவரது உறவினா்கள் 100 க்கும் மேற்பட்டோா் விபத்து ஏற்படுத்திய மாணவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கல்லாவி காவல் ஆய்வாளா் முத்தமிழ்ச் செல்வன் மற்றும் போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினா். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இதுகுறித்து கல்லாவி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இறந்த ராஜிவேலுக்கு மனைவி, இரண்டு ஆண், 1 பெண் குழந்தை உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com