காவேரிப்பட்டணத்தில் 22 ஊராட்சிகளுக்கு குப்பை அள்ளுவதற்கு 38 மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.ரவி தலைமையில் 22 ஊராட்சிகளுக்கு 38 மின்கல வாகனங்கள் அளிக்கப்பட்டன.
தலா ரூ.2.40 லட்சம் மதிப்பிலான இந்த வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் உதவித் திட்ட அலுவலா் ஜாகீா் உசேன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணபவ, வேடியப்பன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.