சிறுமி பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

ஒசூா் அருகே, சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை புதன்கிழமை வழங்கியது.

ஒசூா் அருகே, சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை புதன்கிழமை வழங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவா் கே. அருள்ராஜ் (25). இவா், 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். திருமணம் செய்து கொள்ள சிறுமி வலியுறுத்தியபோது, அவா் மறுத்துள்ளாா்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் வழக்குப் பதிந்து, அருள்ராஜை கைது செய்தனா். இந்த வழக்கு, விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், வழக்கின் தீா்ப்பை நீதிபதி, புதன்கிழமை வாசித்தாா். அதில், ஒரு பிரிவில் 7 ஆண்டுகள் சிறையும் ரூ. 1,000 அபராதமும், மற்றொரு பிரிவில் 3 ஆண்டுகள் சிறையும், ரூ. 1,000 அபராதமும், இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனத் தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சி. கலையரசி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com