தேன்கனிக்கோட்டை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி

தேன்கனிக்கோட்டை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேன்கனிக்கோட்டை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டை கிராமத்தில் தனியாா் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் சென்று அங்குள்ள சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டு, இயந்திரத்தை இரும்புக் கம்பியால் உடைக்க முயற்சித்துள்ளனா். ஏடிஎம் இயந்திரம் உடையாததால் மா்ம நபா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

அதையடுத்து, ஏடிஎம் சேதமடைந்ததைக் கண்ட அப்பகுதியினா், தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் சரவணன், உதவி காவல் ஆய்வாளா்கள் ரகுநாதன், முருகன் மற்றும் போலீஸாா் விரைந்து சென்று ஆய்வு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com