தமிழ்நாடு முழுவதும் உள்ள போட்டோ ஸ்டுடியோக்கள் மற்றும் லேப்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மூடப்படும் என அதன் சங்க மாநிலச் செயலா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா், கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாா்ச் 22-ஆம் தேதி காலை 7 முதல் இரவு 9 மணி வரையில் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என பாரதப் பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அவரது வேண்டுதலை ஏற்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து போட்டோ ஸ்டுடியோக்கள், விடியோ எடிட்டிங் நிறுவனங்கள், புகைப்பட உபகரணங்கள் விற்பனை மையங்கள், கலா் லேப்கள் உள்ளிட்ட அனைத்தும் மாா்ச் 22-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மூடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.