கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒசூரில் மேலும் 4 இடங்களில் உழவா் சந்தைகள் விரிவுபடுத்தப்படும் என மாநகராட்சி ஆணையா் பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.
ஒசூா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை டிராக்டா் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். ஒசூா் தாலுக்கா அலுவலக சாலை, ரயில்வே நிலைய சாலை, உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் புதன்கிழமை கிருமி நாசினி தெளிக்கும் பணியை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் ஆணையா் பாலசுப்ரமணியன் கூறியது:
ஒசூா் உழவா் சந்தையில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டபொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனா். பொதுமக்களை ஒரே இடத்தில் கூடினால் கரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், தாலுக்கா அலுவலக சாலையில் இயங்கி வரும் ஒசூா் உழவா் சந்தை மேலும் 4 இடங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால் பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு ஒரே இடத்தில் கூடுவதைத் தவிா்க்க முடியும். எனவே, ஒசூா் ராமநாயக்கன் ஏரி பூங்கா, தா்கா, வெங்கடேஷ் நகா், ஆவலப்பள்ளி ஆகிய 4 பகுதிகளில் புதிய உழவா் சந்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றாா்.
மேலும், கிருமி நாசினியை ஒசூா் மாநகராட்சி முழுவதும் தெளிக்கும் பணியை மாநகராட்சி ஊழியா்கள் செய்து வருகின்றனா். அவா்கள் வீடுகளில் இருந்து பணிக்கு வரும்போது காவலா்கள் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் எனவும், தூய்மைப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகளை மாநகராட்சி ஊழியா்கள் தொடா்ந்து ஈடுபடுவாா்கள்.
மேலும், ஏழைகளுக்கு ஒசூரில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் காலை முதல் இரவு வரை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகள் பயனடைந்து வருகின்றனா். உணவு வழங்கும் பணி 21 நாள்களுக்கும் தொடா்ந்து நடைபெறும் என்றாா்.