சாலை விபத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் பலி

மத்தூா் அருகே மரத்தின் மீது ஸ்கூட்டா் மோதியதில் பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முகம்(56) புதன்கிழமை உயிரிழந்தாா்.
சாலை விபத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் பலி

மத்தூா் அருகே மரத்தின் மீது ஸ்கூட்டா் மோதியதில் பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முகம்(56) புதன்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராகப் (ஊராட்சி) பணியாற்றி வந்த ஊத்தங்கரையைச் சோ்ந்த சண்முகம், அலுவலகப் பணிகளை முடித்துக் கொண்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

மத்தூா் அருகே மாடரஅள்ளி பாலம் பகுதியில் சாலையோர பனை மரத்தின் மீது ஸ்கூட்டா் மோதியதில் பலத்த காயமடைந்த சண்முகம் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இதுகுறித்து மத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com