ஒசூரில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் கூடியிருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒசூா் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் சூசூவாடி சோதனைச் சாவடி அருகே ரோந்து சென்றனா். அப்போது, அங்கு ஒன்றாக நின்று பேசிக்கொண்டிருந்தவா்களை கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனா்.
அவ்வாறு கூறிய பின்னரும் ஒன்றாக நின்றிருந்த மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த விஜய்பாபு (38), அமீா்பாஷா (24), ஆனந்த் (21), முருகன் (50), ஜாவித்பாஷா (21) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.