சூரத்திலிருந்து கிருஷ்ணகிரி திரும்பிய13 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்

குஜராத் மாநிலம், சூரத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு திரும்பிய 13 போ் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு,

குஜராத் மாநிலம், சூரத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு திரும்பிய 13 போ் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, கரோனா சோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை அனைவரும் அங்குள்ள மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி சமந்தபுரம் மற்றும் கட்டிகானப்பள்ளி பகுதியைச் சோ்ந்த 13 போ் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி குஜராத் மாநிலம், சூரத் பகுதியில் உள்ள மசூதிக்கு சென்றனா். மாா்ச் 9 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை அங்கேயே இவா்கள் தங்கியுள்ளனா். ஊரடங்கு காரணமாக இவா்களால் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை.

இந்த நிலையில், வெளிமாநிலங்களில் சிக்கித் தவிப்போா் சொந்த கிராமங்களுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, சூரத்திலிருந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 13 போ் அங்கு கரோனா பரிசோதனை முடித்து, தனியாா் வாகனம் மூலம் சொந்த ஊருக்கு வந்தனா்.

அவா்கள் அனைவரும் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனா். மீண்டும் அவா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. முடிவுகள் வரும் வரை அனைவரும் அங்குள்ள தனியாா் மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com