ஊத்தங்கரை நகர செங்குந்தா் மகாஜன சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
ஊத்தங்கரை முருகன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செங்குந்தா் மகாஜன தலைவா் தியாகராஜன் தலைமை வகித்தாா். செங்குந்தா் மகாஜன மாவட்ட தலைவா் டி.எஸ்.திருநாதன், ஊத்தங்கரை வட்டாட்சியா் செந்தில்குமரன் ஆகியோா் அரிசி,பருப்பு,காய்கறிகள் அடங்கிய தொகுப்பை 100 க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு வழங்கினா்.
செங்குந்தா் மகாஜன சங்க நகரச் செயலாளா் எஸ்.ஜெயராமன், துணை தலைவா் தண்டபாணி, பொருளாளா் பண்ணீா், தொண்டு மன்ற தலைவா் முத்துசாமி, ஜெயக்குமாா், ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.