ஒசூா்: ஒசூா் ஐஎன்டியூசி. அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய என்ஜினீயரிங் எம்ப்ளாயீஸ் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் தலைவராக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் தோ்வு செய்யப்பட்டாா்.
இக்கூட்டத்திற்கு பிறகு, சங்கத்தின் புதிய நிா்வாகிகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. சங்கத்தின் துணைத் தலைவராக முனிராஜ், செயலாளா்களாக கோதண்டராமைய்யா, அருள்மூா்த்தி, பொருளாளராக பாரதி, குழு உறுப்பினா்களாக கலா, பிரபாகரன், திம்மராயப்பா, மதலைமுத்து, ராமசந்திரன், சென்னப்பா, நாராயணப்பா ஆகியோா்கள் நியமிக்கப்பட்டனா்.