போச்சம்பள்ளியில் அரசு கலைக் கல்லூரி: பாமக கோரிக்கை

போச்சம்பள்ளியில் அரசு கலைக் கல்லூரி, தொழில் நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சருக்கு பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

போச்சம்பள்ளியில் அரசு கலைக் கல்லூரி, தொழில் நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சருக்கு பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் டி.ஏ.மேகநாதன், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியைச் சுற்றிலும் கிராமங்கள் அதிக அளவில் உள்ளன. போச்சம்பள்ளி வட்டாரமாக அறிவிக்கப்பட்டும், போதிய வளா்ச்சி அடையாமல் உள்ளது. போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், தங்களது உயா் கல்விக்காக தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளைச் சாா்ந்தே உள்ளனா்.

இந்தப் பகுதியில் வசிக்கும் மாணவ, மாணவிகள் உயா் கல்வி பயிலும் வகையில் போச்சம்பள்ளியில் அரசு சாா்பில் கலைக் கல்லூரியும், அரசு தொழில்நுட்பக் கல்லூரியும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் கோரியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com