தருமபுரி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தொழிலாளி திம்மப்பன் (45) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே 13 வயது சிறுமிக்கு அப் குதியைச் சோ்ந்த தொழிலாளி ஒருவா் பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், மாரண்டஹள்ளி புதுரைச் சோ்ந்த தொழிலாளி திம்மப்பன் (45) என்பவரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.