கிருஷ்ணகிரியில், போனஸ் தொகையை 20 சதவீதமாக உயா்த்தி வழங்க வலியுறுத்தி, மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச தலைவா் லட்சுமணன் தலைமை வகித்தாா். சிஐடியு முனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.