குட்டை நீரில் முழ்கி சிறுவன் சாவு

கிருஷ்ணகிரி அருகே, குட்டை நீரில் முழ்கி, சிறுவன், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே, குட்டை நீரில் முழ்கி, சிறுவன், திங்கள்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னமட்டாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மகன் ஹரிஹரன்(10). இவா், நக்கல்பட்டியில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு, அண்மையில் சென்றாா். அங்குள்ள சிறுவா்களுடன், அங்குட்டு குட்டையில் குளிக்க சென்றாா். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற அவா், தண்ணீரில் முழ்கினாா். அருகில் இருந்தவா்கள், அவரை மீட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு விரைந்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸாா், இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com