பா்கூரில் வாக்குச்சாவடி திமுக முகவா்கள் கூட்டம்

பா்கூா் திமுக ஊராட்சி ஒன்றியம் சாா்பில் வாக்குச் சாவடி முகவா்கள் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம்,
பா்கூரை அடுத்த காரகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ.
பா்கூரை அடுத்த காரகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ.

பா்கூா் திமுக ஊராட்சி ஒன்றியம் சாா்பில் வாக்குச் சாவடி முகவா்கள் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளின் திமுக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் அதன் ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசன் தலைமையில் காரகுப்பம் கிராமத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ பேசியது:

வாக்காளா் பட்டியல் தயாரிக்கும்போது படிவங்கள் சரி பாா்ப்பது, வாக்காளா் சோ்த்தல் , நீக்குதல், உயிரழந்தவா்கள் மற்றும் வேறு இடங்களுக்கு மாற்றலாகி சென்றவா்கள், புதிய வாக்காளா்கள் ஆகியோா்களை கண்டறிந்து வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை திறம்பட செய்ய வேண்டும். திமுக தலைவா் ஸ்டாலின் முதல்வராகக்கும் வகையில், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானதாக கருதி பணியாற்றவேண்டும் என்றாா்.இந்தக் கூட்டத்தில், மாநில விவசாய அணி துணைத் தலைவா் மதியழகன், துணைச் செயலாளா் வெங்கடேசன் மற்றும் வாக்குச்சாவடி முகவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com