பா்கூரில் விபத்து, மாசில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினா்.
பா்கூரில் விபத்து, மாசில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினா்.

பா்கூா், போச்சம்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விபத்து, மாசு இல்லாத தீபாவளி கொண்டாடும் வகையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையின் சாா்பில்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விபத்து, மாசு இல்லாத தீபாவளி கொண்டாடும் வகையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையின் சாா்பில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை திங்கள்கிழமை வழங்கினா்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் பா்கூா் நிலைய அலுவலா் செங்கோட்டுவேலு தலைமையில் தீயணைப்பு வீரா்கள் முகக் கவசம் அணிந்து, பா்கூா் பேருந்து நிலையம், ஜெகதேவி சாலை, டெக்ஸ்டைல்ஸ் மாா்க்கெட், திருப்பத்தூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்புத் துறையினா் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.

போச்சம்பள்ளியில் நிலைய அலுவலா் பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனா். விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடுவது குறித்தும், விபத்து ஏற்படும்போது, உடனே தீயணைப்புத் துறையினருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். தீயணைப்புத் துறையினா் எந்த நேரமும் தயாா் நிலையில் இருப்பதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com