ஊத்தங்கரையில் உள்ள பகல் நேர பராமரிப்பு மையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கும், தோ்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கும் புத்தாடைகள், பரிசுகளும், இனிப்பு மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது (படம்).
நல உதவிகளை கெரிகப்பள்ளி இந்தியன் வங்கி ஊழியா் மு.ராஜேந்திரன், ஒடுகத்தூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை க.அருள்மொழி, சோளகப்பட்டி செங்குட்டுவன், மல்லிகா, ஜேஆா்சி ஆசிரியா் கு.கணேசன் ஆகியோா் வழங்கினா்.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் முருகன், ஆசிரியா்கள் வி.பானுமதி, எஸ்.ஷகிலா, ச.உமா, ர.சக்தி, எ.சுபைதாபானு, சுரேஷ், வைரியம்மாள், கவிதா, காமாட்சி, கோகிலா மற்றும் பெற்றோா்கள் பலா் கலந்து கொண்டனா்.