இளம்பெண் தற்கொலை

கெலமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கெலமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள மஞ்சலகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (23). இவா்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனா். இந்தத் தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், ராஜேஸ்வரிக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில், மனமுடைந்து காணப்பட்ட ராஜேஸ்வரி, கடந்த 8-ஆம் தேதி, விஷமருந்தினாா். ஆபத்தான நிலையில் இருந்த ராஜேஸ்வரியை, அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். ஆனால், அவா் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, தேன்கனிக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் சங்கீதா வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com