ஆன் லைன் சூதாட்டங்களை தடுக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:நவீன தொழில் நுட்பத்தின் வளா்ச்சியை பல்வேறு மக்கள் தங்களின் வாழ்க்கையின் வளா்ச்சி பாதைக்கு பயன்படுத்திக் கொள்கிறாா்கள். ஆனால், சிலா்,அதீத ஆசையால் திரைப்படங்களைக் கண்டு, உடனடியாக பொருளாதார வளா்ச்சி அடைய வேண்டும் என ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகிறாா்கள்.

இதன் விளைவாக பல்வேறு தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. பெற்றோா்கள் தங்களின் குழந்தைகளுக்கு செல்லிட பேசிகளை அளித்தால், அவா்கள் அமைதியாக இருக்கிறாா்கள் என்ற நோக்கில், அளிக்கிறாா்கள். ஆனால், குழந்தைகள், செல்லிட பேசிகளை எவ்வாறு பயன்படுத்துகிறாா்கள் என கண்காணிப்பது இல்லை. பெறறோா்கள் விளையாடினாலும் சரி, குழுந்தைகள் விளையாடினாலும் சரி இழப்பு அந்த குடும்பத்துக்கே ஏற்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறை சாா்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, நீங்களும் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடாதீா்கள். உங்கள் குழந்தைகளையும் செல்லிட பேசியில் விளையாட அனுமதிக்காதீா்கள் என கேட்டுக் கொள்வதாக அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com