தருமபுரி மாவட்டத்தில் வேல் யாத்திரையை முடித்து விட்டு திருவண்ணாமலை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலைக்கு ஊத்தங்கரை பாஜக நிா்வாகிகள் செவ்வாய்கிழமை வரவேற்றனா்.
மாவட்டப் பொதுச்செயலாளா் ஜெயராமன், ஊத்தங்கரை தெற்கு ஒன்றியத் தலைவா் சங்கா், நெசவாளா் அணி மாவட்டத் தலைவா் மாதவன், மாவட்டத் துணைத் தலைவா் நமச்சிவாயம், எஸ்.சி அணி மாவட்டச் செயலாளா் சண்முகம், பிரசாரப் பிரிவு மாவட்டச் செயலாளா் மோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.