கிருஷ்ணகிரியில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி தொலைத் தொடா்பு அலுவலகம் அருகே நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் நகரத் தலைவா் ரகமத்துல்லா தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா்கள் பன்னீா் செல்வம், கோபாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்டத் தலைவா் ஜேசு துரைராஜ், முன்னாள் மாநில துணைத்தலைவா் அக.கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் மாவட்டத் தலைவா் நாராயணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில் பங்கேற்றவா்கள் இந்திரா காந்தியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.