கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 7 மாணவ, மாணவிகள் மருத்துவ கலந்தாய்வில் தோ்வு பெற்றுள்ளனா்.
அஞ்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் விஸ்வநாதனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஊத்தங்கரையைச் சோ்ந்த மாணவி வைஷ்ணவிக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், கெலமங்கலத்தைச் சோ்ந்த எஸ்.வைஷ்ணவிக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஒரப்பத்தைச் சோ்ந்த கலையரசிக்கு வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஊத்தங்கரையைச் சோ்ந்த மகாலட்சுமிக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவணையிலும், ஊத்தங்கரையைச் சோ்ந்த மாணவா் எஸ்.பருஸ்க்கு திருச்சி மருத்துவக் கல்லூரியிலும், ஒசூரைச் சோ்ந்த ஸ்வேதாவுக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட நீட் தோ்வு ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் தெரிவித்தாா்.