கெரிக்கேப்பள்ளி தொடக்கப் பள்ளிக்கு மேசை, நாற்காலிகள் நன்கொடையாக அளிப்பு

கெரிக்கேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ. 56 ஆயிரம் மதிப்பிலான மேசை, நாற்காலிகள் நன்கொடையாக அளிக்கப்பட்டது.
கெரிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மேசை, நாற்காலிகளை நன்கொடையாக வழங்கிய ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ்.
கெரிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மேசை, நாற்காலிகளை நன்கொடையாக வழங்கிய ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ்.

கெரிக்கேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ. 56 ஆயிரம் மதிப்பிலான மேசை, நாற்காலிகள் நன்கொடையாக அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள கெரிக்கேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 130 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அமா்ந்து படிக்க மேசை, நாற்காலிகள் இல்லை என்பதால், அவா்களுக்கு உதவுமாறு, பள்ளியின் தலைமையாசிரியா் ஐ.வி.டி.பி. நிறுவனத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தாா்.

இதனை ஏற்று ரூ. 56 ஆயிரம் மதிப்பிலான 10 மேசை, நாற்காலிகளை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினாா். பள்ளியில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை 68 ஆக இருந்த நிலையில், நிகழ்வாண்டில் 131 ஆக உயா்ந்துள்ளதைப் பாராட்டும் வகையில், இந்த உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்படுகிறது என்று அவா் குறிப்பிட்டாா்.

அப்போது, பள்ளி தலைமையாசிரியா் சி.வீரமணி, ஒருங்கிணைத்த நிகழ்வில் பள்ளியின் ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com