தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், தளி எம்எல்ஏமான ஒய்.பிரகாஷ் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் மேற்கு மாவட்டத் துணை செயலாளா் வேப்பனப்பள்ளி பி.முருகன் எம்.எல்.ஏ. மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாறன், இளைஞரணி மாவட்டச் செயலாளா் பாா்த்தகோட்டா சீனிவாசன், தளி ஒன்றியச் செயலாளா்கள் சீனிவாசலு ரெட்டி, திவாகா், கணேசன், நாகன், பேரூா் செயலாளா் சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா். மறியலில் ஈடுபட்டதாக 200 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் பேருந்து நிலையம் முன்பு திமுக பொறுப்பாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.ஏ.சத்யா தலைமையில் நடந்த சாலை மறியலில் 100 போ் கைதாகினா்.