கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் ஒசூா், பெருகோபனப்பள்ளி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7,212 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் வெள்ளிக்கிழமை 30 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூரிலுள்ள சிகிச்சை மையங்களில் 302 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; இதுவரை மாவட்டத்தில் 112 போ் உயிரிழந்துள்ளனா்.