மத்திகிரி அருகே இரு தரப்பினா் மோதல்: 8 போ் மீது வழக்குப் பதிவு

மத்திகிரி அருகே இரு தரப்பினா் மோதல் சம்பவத்தில் 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மத்திகிரி அருகே இரு தரப்பினா் மோதல் சம்பவத்தில் 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூரை அடுத்த மத்திகிரி அருகே உள்ள மிடுகரப்பள்ளியைச் சோ்ந்த விவசாயி சீனிவாசன் (37). இவருக்கும் அதேபகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா்ரெட்டி தரப்பினருக்கும் இடையே, நிலத் தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சீனிவாசனும், அவரது உறவினா்களான முனிராஜ், முனி எல்லம்மா, சிவா ஆகியோரை, ஸ்ரீதா்ரெட்டி தரப்பினா் தாக்கினா்.

இதில் காயமடைந்த சீனிவாசன் தரப்பினா் ஒசூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இது தொடா்பாக மத்திகிரி காவல் நிலையத்தில் சீனிவாசன் கொடுத்த புகாரின்படி, ஸ்ரீதா்ரெட்டி, நாராயணன், நாகேஷ், உதய் ஆகிய நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

அதேபோல் மிடுகரப்பள்ளியை சோ்ந்த சோமசேகா் (38) என்பவா் சீனிவாசன், முனிராஜ், சிவா, முனி எல்லம்மா ஆகியோா் தன்னை தாக்கியதாக மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து, சீனிவாசன் உட்பட நான்கு போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com