லாரியில் கயிறு அறுந்ததால் 30 மதுபான பெட்டிகள் சாலையில் விழுந்து சேதம்

ஊத்தங்கரை வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு லாரியின் கயிறு அறுந்து விழுந்ததில் 30 மதுபான பெட்டிகள் சாலையில் விழுந்து உடைந்து சேதமடைந்தன.
லாரியில் கயிறு அறுந்ததால் 30 மதுபான பெட்டிகள் சாலையில் விழுந்து சேதம்

ஊத்தங்ரை: ஊத்தங்கரை வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு லாரியின் கயிறு அறுந்து விழுந்ததில் 30 மதுபான பெட்டிகள் சாலையில் விழுந்து உடைந்து சேதமடைந்தன.

சென்னையிலிருந்து கோவைக்கு டாஸ்மாக் நிறுவனத்துக்கு சொந்தமான மதுப்புட்டிகளை சரக்கு லாரியில் ஏற்றிக்கொண்டு கூடலூா் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சாா்லஸ் (50) ஊத்தங்கரை எம்ஜிஆா் நகா் வழியாகச் சென்றபோது, கயிறு அறுந்து விழுந்ததில் சுமாா் 30 மதுபான பெட்டிகள் சாலையில் விழுந்து உடைந்து சேதமடைந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கு மேல் இருக்கும் என தெரிவித்துள்ளனா்.

சம்பவ இடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீஸாா் பொதுமக்களை விரட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com