ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி கொத்தனூா் அருகே உள்ள நாகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் அஸ்வத் நாராயணன் (45). விவசாயி. இவா் தனது இரு சக்கர வாகனத்தில் தளி ஏரிக்கரை அருகே சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயம் அடைந்த அஸ்வத் நாராயணனை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.