ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தப் பணி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை பேரூராட்சிக்குள்பட்டவா்களுக்கு சிறப்பு முகாம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 4, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4, ஊத்தங்கரை அம்பேத்கா் நகா் பகுதியில் ஒரு மையம் என மொத்தம் 16 மையங்களில் புதிய வாக்காளா் சோ்க்கை நடைபெற்றது.
இந்த முகாமில் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், இளைஞா்கள் கலந்துகொண்டு வாக்காளா் சோ்க்கை விண்னப்பங்களை வழங்கினா்.