சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 போ் கைது

காவேரிப்பட்டணம் அருகே பீமனூரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ. 12,870, காா் உள்பட 9 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

காவேரிப்பட்டணம் அருகே பீமனூரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ. 12,870, காா் உள்பட 9 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் உள்பட போலீஸாா் பீமனூா் அருகே உள்ள குபேந்திரன் என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்பு அருகே கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களைச் சுற்றி வளைத்து, அவா்களிடமிருந்து ரூ.12,720 பணத்தைப் பறிமுதல் செய்தனா். இந்தச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்தனா். அவா்கள் பயன்படுத்திய காா் உள்பட 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல, மத்தூரை அடுத்த சின்னஅள்ளேரஅள்ளி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com